Archive for the ‘திரை விமர்சனம்’ Category
நடிப்பு: சத்யராஜ், கரண், சுஹானி, கஞ்சா கருப்பு, நாசர்
இசை: பரத்வாஜ்
தயாரிப்பு: உடையார் மூவீஸ்
இயக்கம்: ஆர் அரவிந்தராஜ்
பிஆர்ஓ: டைமண்ட் பாபு
கல்லூரி வாழ்வை கவித்துவமாக சொல்லும் கதை…
என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேரும் சித்தார்த், டைசன், விமல், ஷங்கர் நால்வரையும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்கின்றனர்.
மாணவிகள் மது, பெனாஸ் போன்றோரும் ராக்கிங்குக்கு ஆளாகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல நட்பாகிறார்கள்.
நடிகர்கள்: கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்ரகாஷ், சூரி
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: சுசீந்திரன்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
ஒரே சாதிக்குள்ளான வம்சங்களுக்குள் நடக்கும் போராட்டமே கதை.
கலைஞர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி நாயகனாக அறிமுக மாகியுள்ளபடம். கிராமத்தில் நடக்கும் திருவிழாவில் ஒவ்வொரு வம்சத்தினரும் கவுரவுவிக்கப்படுகின்றனர்.
கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவி மேக்னா மீது முதலாமாண்டு மாணவர் பாலாஜிக்கு காதல். மேக்னா தம்பியாக நினைத்து பழங்குகிறார். ஒரு கட்டத்தில் காதலை வெளிப்படுத்தும் பாலாஜி அவர் இல்லாமல் வாழ முடியாது என்கிறார். மேக்னாவே காதலை ஏற்க மறுக்கிறார்.
நடிகர்கள்: அருள்நிதி, சுனேனா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி
கலை இயக்கம்: தேவராஜன்
இசை: தாஜ் நூர்
பிஆர்ஓ: நிகில் முருகன்
இயக்கம்: பாண்டி ராஜ்
தயாரிப்பு: மோகனா மூவீஸ்
குப்பத்தில் இருந்து பிளஸ்-2 படிக்கும் ஏழை மாணவன் அதர்வா. பட்டம் விடுவதில் கில்லாடி. அவருக்கும் பேஷன் டெக்னாலஜி படிக்கும் கோடீஸ்வர பெண் சமந்தாவுக்கும் மோதல் வருகிறது. பிறகு ஒருவரையொருவர் புரிந்து நட்பாகிறார்கள். சமந்தா மேல் அதர்வா காதல் வயப்படுகிறார்.
சிவப்பு விளக்கு பகுதி ஏஜெண்டாக இருக்கும் ரமேஷ், அப்பாவியான மோகனாவை காதலிப்பது போல் நடித்து வலையில் விழவைக்கிறான். திருமணம் செய்வதாக ஏமாற்றி விபசார விடுதி நடத்தும் சரசாவிடம் விற்கிறான். அங்கிருந்து தப்பிக்க போராடுகிறாள். “எய்ட்ஸ்” இருப்பதாக சொல்லி கற்பை காப்பாற்றுகிறாள்.
பொள்ளாச்சி சந்தையில் தில்லு முல்லு செய்து அன்றாட வாழ்வைநகர்த்து பவர்கள் சத்யராஜ், கவுண்ட மணி. அதே சந்தையில் வியாபாரிகளிடம் பிக்பாக் கெட் அடிக்கிறார் சூசன்.
வாரிசு இல்லாத பெரும் பண்ணையார் விணுசக்கரவர்த்திக்கு சத்யராஜை வளர்ப்பு மகனாக்கி சொத்துக்களை அடிக்க வியூகம் வகுக்கிறார் ஜோதிடர் டி.பி.கஜேந்திரன், சத்யராஜ் வளர்ப்பு மகனானதும் அவருக்கு சூசனை திருமணம் செய்து வைக்க…
லட்டு இல்லாத திருப்பதி, பஞ்சாமிர்தம் இல்லாத பழனி, மக்கள் நெரிசல் இல்லாத ரங்கநாதன் தெரு அதே போல பயம் இல்லாத ஒரு திகில் படம்தான் ‘ஆனந்தபுரத்து வீடு’.
நாயகன் நந்தாவின் சிறு வயதில் அவருடைய அப்பாவும், அம்மாவும் கார் விபத்து ஒன்றில் இறந்து விடுகிறார்கள்.
சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்து காதல் கதை! அதுவும் மதராசப்பட்டினத்து டோபிகானா பகுதியில் வசிக்கும் சலவை தொழிலாளி ஒருவருக்கும், அந்த மாகாணத்தையே ஆளும் ஆங்கிலேயே கவர்னரின் செல்ல மகளுக்குமிடையேயான காதல் கதை என்பதுதான் ஹைலைட்.
விமர்சனம் 1
அடாவடி கும்பல் ஒன்றால் அர்த்தம் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண் ஒருத்திக்கு, தன்னை வறுத்திக் கொண்டாலும் வருத்தம் இல்லாமல் விடுதலை பெற்று தந்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் பொருத்தமான ஜோடியாகும் இளைஞனின் கதைதான் மிளகா.
பாம்பு பழிவாங்கும் வழக்கமான கதைதான்! அதை கிராபிக்ஸ் உத்திகளின் வளர்ச்சியையும், முமைத்கானின் கவர்ச்சியையும் வைத்து பிரமாண்டப்படுத்தியிருக்கிறார்கள். அவ்வளவே!
கதைப்படி, பவுர்ணமி நாளில் கூடும் இரண்டு பாம்புகளின் தலையில் ஜொலிக்கும் மாணிக்க கல்லை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துக் கொண்டால் இந்த உலகையே தங்கள் வசப்படுத்திக் கொள்ளலாம் எனும் பேராசையில் மாந்தரீகம், தாந்தரீகங்களை நம்பி அது மாதிரி…
வீட்டுக்கும் அடங்காமல், ஊருக்கும் அடங்காமல் வெட்டும் குத்துமாக திரியும் நாயகர், நாயகி சொன்ன ஒரே காரணத்திற்காக உருமாறி… ஊர் மாறி… உழைத்து முன்னேறி காதலி முன் போய் நிற்கும் கதை!
கதைப்படி, பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே உடன் படிக்கும் நாயகி அருந்ததிக்கு பாடிகார்டாக வலம் வருகிறார் நாயகர் கதிர்.
அம்பாசமுத்திரல் இருந்து அநாதையாக சென்னை வரும் சிறுவன் அம்பானி ஆக முயற்சிப்பதே அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் கரு, கதை, களம், காமெடி எல்லாம்!
பிறக்கும்போதே அப்பாவை இழந்து படிக்கும்போது இலவச சேலை கூட்டத்தில் அம்மாவையும் இழந்து அநாதையாகும் கருணாசுக்கு உளரும் உறவும் ஒத்தாசை செய்யாமல் உபத்திரம் தந்ததால் சின்ன வயதிலேயே சென்னைக்கு வருகிறார்.
சற்று பெரிய இடைவெளிக்குப் பின் மண் வாசனையுடன் வெளிவந்திருக்கும் கலக்கலான கிராமத்து காதல் கதைதான் களவாணி படத்தின் மொத்த கதையும். அதுவும் பச்சை பசேலென தஞ்சை மாவட்டத்தின் நஞ்சை – புஞ்சை பகுதிகளிலேயே களவாணி படம் ழுழுதும் படமாகியிருப்பது வேறு, கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
கொத்தனார் – சித்தாள் என்றாலும் அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்குள்ளும் உணர்ச்சிகளும், போராட்டங்களும் உண்டென்பதை அழகான ஒரு காதலுடனும், அசிங்கமான பல காமகளியாட்டங்களுடனும் சொல்லியிருக்கும் படம்தான் திட்டக்குடி.
பிஞ்சிலேயே பழுத்த ஒருவனால் நஞ்சாகிப் போகும் ஒரு குடும்பப் பெண்ணின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியுள்ளது துரோகம் நடந்தது என்ன?.
கதைப்படி அம்மாவை இழந்து அப்பா செல்லமாக வளரும் வசதியான வீட்டுப் பிள்ளை, அந்த வீட்டு தாதிப் பெண்ணுடன் சல்லாபம் கொள்கிறான்.
ஐம்பது, அறுபது வயதிலும் ‘வீக்’ வைத்துக் கொண்டும், பொக்கை வாயை மறைத்துக் கொண்டும் மரத்தை சுற்றி டூயட் பாடியே தீருவேன், பைட் எனும் பேரில் இருபது, இருபத்தைந்து பேரை பந்தாடியே தீருவேன்… என அடம்பிடிக்கும் நம்மூர் வயசாளி ஹீரோக்களைப் போல் இல்லாமல், உலகப்புகழ் ஜாக்கிசான் தன் வயதிற்கேற்ற ரோலை ஏற்று நடித்திருப்பதற்காகவே தி கராத்தே கிட்…
நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்வி ராஜ், கார்த்திக், பிரபு, ப்ரியாமணி, ரஞ்சிதா
வசனம்: சுஹாசினி
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம்: மணிரத்னம்
தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ்-பிக் பிக்சர்ஸ்
பிஆர்ஓ: நிகில் முருகன்

